சாகரன்

“தேன்கூடு சாகரன் அவர்களுக்கு அஞ்சலி”ன்னு ஒரு அறிவிப்பு. முதல்ல சாகரனுக்கு நன்றின்னு தப்பா வாசித்து பதிவை திறந்ததற்கு அப்புறம் தான் அதிர்ச்சி உரைத்தது.

வலைப்பதிவுலகில் நான் சம்பாதித்த நட்புகளில் முதன்மையானவர் கல்யாண். சமீப காலமாக அவருடன் அதிக தொடர்பு இல்லை என்ற போதும்..

கடைசியாக தொடர்பு கொண்டது அவர் தேண்கூடு தளத்தினை உருவாக்கி கொண்டிருந்த போது. என்னோட Website பார்த்துக் கொண்டிருந்த போது புது referer தெரியவே … என்ன தளம் என்று தொடர்ந்து சென்று பார்த்ததில் இவர் இந்த தளத்தை உருவாக்கி வருநது தெரிந்தது. ஆஹா நண்பர் இப்படி ஒரு வேலை செய்துட்டிருக்காரான்னு சும்மா வம்பு செய்யலாம்னு ஒரு membership ID உருவாக்கிட்டு வந்துட்டேன். அப்போது அந்த தளம் பற்றிய அறிவிப்பு ஏதும் வந்திருக்கவில்லை.

அடுத்த நாள் ரொம்ப சந்தோசமா மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.

Dec 7, 2005 4:49 PM
அன்பு நவன்,

வணக்கம், நலம். நீங்க எப்படி இருக்கீங்க.

என்ன, கல்யாணம்லாம் ஆயிடுச்சா?! :-)

ஒரு சிஸ்டம் ஒண்ணு டெவலப் பண்ணிகிட்டிருக்கிறேன். தேன்கூடு.காம் அப்படின்னு,
தமிழ் வலைப்பதிவுகளை வகைப்பிரிக்கும் ஒரு வலைப்பதிவுகள் வாசல்(போர்டல்) மாதிரி.
தமிழ்மணத்துக்கு போட்டியா இல்ல.. ஆனா, ஒரே ஒரு வலைப்பதிவுகள் திரட்டி தமிழ்ல இருக்கறது சரியில்லைனு தோணுது.

உங்க ஐடி-யை இன்னிக்கு மெம்பர்லிஸ்டில் பார்த்தேனா, சந்தோசமாயிடுச்சு.

சைட் எப்படி வந்திருக்கு? நல்லாருக்கா?
உங்க கருத்துக்களை ரொம்பவும் எதிர்பார்க்கிறேன்.

எனக்கு மறக்காம மெயில் அனுப்புங்க.

அன்புடன்,
சாகரன்.

அதன் பின்பு ஓரிரு முறை அவருடன் email தொடர்பு கொண்டது தான். கடந்த 18 மாதங்களில் எனது வாழ்க்கை மாறிப்போனது… சாகரனுடனான தொடர்பும் அறுந்து போனது. அப்பப்பம் தேன்கூடு தளத்தை பார்த்திருக்கேன். Good jobன்னு மனசுக்குள்ளேயே பாராட்டிருக்கேன். இடைபட்ட இந்த காலத்தில் தேன்கூடு மூலமாக அவர் செய்திருக்கும் சாதனைகளின் வீச்சு இப்பம் தான் புரியுது. வலைப்பதிவர்கள் சாகரனை பத்தி எழுதும் போது.. அவரை பற்றிய மதிப்பு இன்னும் கூடுது.

கூடவே எனது வாழ்க்கையில் நான் என்ன சாதித்து விட்டேன் என்ற கேள்வியும் வருது…

அப்துல் கலாமின் இந்த வரிகள் ஏனோ இன்னும் அர்த்தம் வாய்ந்ததாக தோன்றுகிறது…

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!

இது வரைக்கும் நேரில் பார்க்காதவரை இன்று தான் புகைப்படமாக மத்த பதிவுகளில் பார்த்தேன்.

நண்பர் ஒருவரை இழந்த இழப்பு. மனது வலிக்கிறது. அவர் குடும்பத்தாருக்கு யார் எந்த வகையில் ஆறுதல் சொல்ல முடியும்? அவர்களுக்காக பிரார்த்தனை செய்வது தான் இப்போதைக்கு தேவையான விசயம்னு தோனுது.

சாகரன் தொடங்கிய பணிகளை தொடர்வதற்கு என்னாலான உதவிகள் எதுவானாலும் செய்ய காத்திருக்கிறேன். தேன்கூடோ அல்லது அவரது மற்ற திட்டங்களோ தொடர்வதற்கு என்ன தேவைன்னு யாராவது சொல்ல முடியுமா ப்ளீஸ்…

Improved Tamil language support in Mozilla

மொசில்லா குடும்ப உலாவிகள் தமிழ் யுனிகோடு எழுத்துக்களை பிய்த்து போடுவது பற்றி பலர் குறை பட்டாகிவிட்டது. தமிழ் தெரிந்த நிரலாளர்களுக்கு இதனை சரி செய்ய நேரமும் தேவையான விபரமும் இல்லாத நிலையில் இதற்கான முடிவு என்ன என்று அறியாமல் அனைவரும் முழித்துக் கொண்டிருக்க, இன்றைக்கு Mozilla Bugzilla பக்கமாக மேய்ந்து கொண்டிருந்த போது இந்த சுட்டி கண்ணில் பட்டது. http://blacksapphire.com/firefox-rtl/

இன்னும் சோதித்து பார்க்க வில்லை. எப்படி வேலை செய்கிறது என்று பார்க்க வேண்டும்.

This seems to work with a few minor glitches. Will write a final report after some intensive testing.

அமைதியான ..

என்றாவது ஒரு நாள் யாராவது கேட்பதற்கு முன்பாக சொல்லி விடுவது நல்லது. நான் தமிழ்மணம் திரட்டியிலிருந்து எனது பதிவுகளை விலக்கிக் கொள்ள கேட்டுக்கொண்டு விலகியுள்ளேன்.

இதற்கான காரணம் என்று பெரிதாக ஒன்றும் இல்லை . சுருக்கமாக சொல்வதாக இருந்தால் தமிழ்மணம் வந்ததிலிருந்து வலைப்பதிவுகளுக்கு வாசகர் வட்டம் கூடியுள்ளது. ஆனால் வலைப்பதிவுகளுக்கான அடிப்படை தன்மைகளை பல வலைப்பதிவுகள் இழக்கத் தொடங்கியுள்ளன . Tamil blogs have now started to look like a forum. One big Tamizmanam forum.

கொஞ்ச நாட்கள் சந்தடியிலிருந்து விலகியிருக்கலாம் என்று தான் தமிழ்மணத்திலிருந்து விலகியுள்ளேன். வலைப்பதிவுகள் மற்றும் தாங்கள் உபயோகிக்கும் சேவைகள் பற்றிய புரிந்துணர்வு கூடிய விரைவில் பயனர்களுக்கு வரும் என்று நம்புகிறேன்.

இன்னமும் தமிழ்மணம் RSS feedஐ எனது திரட்டிகளிலிருந்து தூக்கிவிட கை பரபரக்கிறது, தினசரி செலவழிக்கும் நேரத்தில் கொஞ்சம் மிச்சமாகும். அதற்கு முன் நான் இரசிக்கும் சிலரின் எழுத்துக்களை படிப்பதற்காக எனக்கான ஒரு OPML உருவாக்க வேண்டும்.

நம்ம மக்களுக்கு பரபரப்பா ஏதாவது ஒன்னு இருந்து கிட்டே இருக்கு. இப்போதைக்கு காசியும் தமிழ்மணமும் எல்லார் வாயிலும் அவலாகிருக்கிறார்கள். இன்னும் கொஞ்ச நாட்கள் இந்த சந்தடியில் நானும் மூழ்கியிருந்தால் வாழ்க்கையின் கால்வாசி நேரத்தை இந்த பரபரப்புகளை பார்வையிடுவதிலேயே முடிந்து விடும். கொஞ்ச நாளா வலைப்பதிவுகள் பக்கம் வர முடியாமல் இருந்து இந்த திரும்பி இந்த பக்கம் திரும்பி பார்த்தால் காசி செஞ்சது ‘சரிXதப்பு’ன்னு ஒவ்வொருத்தரும் விடுற அறிக்கையை ஓடி ஒடி படிக்கதுலேயே இரண்டு மூனு நாளா முழு நேரமும் போயிடுச்சு. தமிழ்மணம் சேவையில் புகுத்தப்பட்டிருக்கும் மாற்றங்கள் கட்டுப்பாடுகள் பற்றி கருத்து சொல்வதற்கு ஒன்றும் இல்லை . ஆனால் இந்த மாதிரி சந்தர்ப்பங்கள்ல ஒவ்வொருததரும் விடுற அறிக்கையை படிச்சு என் BP ஏறாம இருக்க நானாவே இதை விட்டு ஒதுங்கிக்கிடுறது நல்லது இல்லை .

குடி பெயர்தல்

“ஐரோப்பாவிலிருந்து குடி பெயர்ந்து இங்கே வருபவர்கள் பரவாயில்லை. கலாசாரத்தில் பெரிதாக மாற்றம் இல்லாதிருப்பதால் அவர்கள் இங்குள்ள சமூகத்தில் கலந்து விடுகிறார்கள். ஆனால் மற்ற நாடுகளிலிருந்து வருபர்கள் தான் பெரிய பிரச்சனை.”

காலையில் அலுவலகத்துக்கு கிளம்புகையில் பிபிஸியில் அந்த பெண்மனி பேசிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது. ஏதோ பத்திரிக்கையின் உதவி ஆசிரியர் என்று அவர் பெயர் போட்டு கீழே எழுதியிருந்து. பெயரும் பத்திரிக்கையும் நினைவு இல்லை. கூட ஒரு கறுப்பர் இன நடுத்தர வயது ஆண். முதலில் இருந்து பார்க்காததால் அவரும் யார் என்று தெரியவில்லை.

அவர் ‘அப்படியெல்லாம் இல்லை. இங்கு புலம் பெயர்ந்து வரும் அனைவரும் இந்த சமூகத்தில் ஒரு பகுதி தான்’ என்று மறுக்க, ‘இல்லை எனக்கு தெரிந்து ஆப்பிர்க்காவில், ஆசியாவில் இருந்து வரும் பல குடும்பத்தில் இருந்து வரும் பலர் இன்னமும் தங்கள் பழக்க வழக்கத்தை விடாமல் தொடர்ந்து கடை பிடித்து வருவதால் அவர்களால இந்த சமூகத்துடன் ஒன்றிணைய முடியவில்லை’ என்று விடாது அடம் பிடித்தார் அந்த பெண்.

அவரது பார்வையில்

  • புலம் பெயர்ந்து வருபவர்களின் கலாசாரத்தில் பெரிய வேறுபாடு இருந்தால் அது ஏற்றுக் கொள்ள முடியாது.
  • பங்க்ளாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து வருபவர்களை விட இந்தியர்கள் விரைவாக மாறிக் கொள்கிறார்கள். அதனால் அவர்களாலும் அவர்கள் குழந்தைகளாலும் அதிகமாக சம்பாதிக்க முடிகிறது. அதன் மூலம் நாட்டின் முன்னேற்றத்துக்கும் உதவ முடிகிறது.

இன்னும் சில காரணங்களை அடுக்கிக் கொண்டு போனார். அவர் பேசியதில் சில விசயங்கள் இனவெறியாளரின் பேச்சு போன்று தோன்றவே நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் நெளிந்து கொண்டிருந்தனர்.

ஆனால் அந்த கறுப்பர் அழகா இரண்டு கேள்வி கேட்டார்.

  • இங்கு வருபவர்கள் தங்கள் அடையாளங்களை அழித்து விட்டு உங்களுக்கு தகுந்தார் போல் மாற வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். இரண்டு மூன்று தலைமுறைகளாய் இங்கு வாழ்ந்தும் சில இனத்தவர் தங்கள் பழக்கவழக்கங்களை விடாது பிடிவாதமாய் கடைபிடித்து இங்குள்ளவர்களிடம் இருந்து தள்ளியே இருக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இரண்டு மூன்று நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்தும் ஆங்கிலேயர்கள் ஏன் ஆப்பிரிக்க பழக்கவழக்கங்களுக்கு மாறாமல் தங்கள் பழக்க வழக்கங்களை இன்னமும் கடை பிடிக்கின்றார்கள்?
  • இந்தியர்கள் சமூகத்துக்கு அதிக பங்களிப்பதாக சொல்கிறீர்கள். இந்தியர்கள் என்றால் குஜராத்தியா? பஞ்சாபியா? மதராஸியா? எவரை சொல்கிறீர்கள்?

இதற்குள் செய்தியறிக்கைக்கு நேரமாகிவிட்டது என்று தொகுப்பாளர் இடை புகுந்து இவர்களின் பேச்சினை முடித்துக் கொண்டார்.

இந்த விவாதத்துக்கு காரணம் என்ன என்று பின்னர் தான் தெரிந்தது.

  • கடந்த பத்தாண்டுகளில் நாட்டின் மக்கட்தொகை அதிகரிப்பில் பாதிக்கு மேலானவர்கள் வெளிநாட்டில் இருந்து புலம் பெயர்ந்திருப்பவர்கள்.
  • இலண்டனில் இப்போது வசிப்பவர்களில் நான்கில் ஒருவர் வெளி நாட்டில் பிறந்தவர்.

சமன்பாட்டில் நிகழ்ந்து வரும் சில மாற்றங்கள் இங்குள்ளவர்களுக்கு கவலை அளிப்பது தெரிகிறது. அதிலும் சமீபத்திய தீவிரவாத தாக்குதலுக்கு பின்பு இந்த கவலை வலுப்பட்டிருக்கிறது.

கடந்த இரு மாதங்களாக ஊடகங்களில் வரும் பல செய்திகளும், அறிக்கைகளும், நிகழ்சிகளும் சில sensitiveஆன விசயங்களை நாசூக்காக தொட்டும் தொடாமலும் பேசி வருகிறது. இது வரைக்கும் தொலைக்காட்சிகளின் செயல்பாட்டினை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

இதுவரைக்கும் mainstream media பேசாமல் இருந்த பல விடயங்கள் இப்போது அலசத் தொடங்கியிருக்கிறது. இஸ்லாம் மதம் பற்றி கடந்த சில வாரங்களில் பார்த்த தொலக்காட்சி நிகழ்சிகளும் இதில் அடக்கம்.

Sim Cityயும் Simputerஉம்

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் வெளி வந்த சிம்ப்யூட்டர் (Simputer) கைக் கணினி அதன் மீதிருந்த எதிர்பார்ப்புகளை முழுவதுமாக பூர்த்தி செய்யவில்லை என்றே தோன்றியது.

Continue reading “Sim Cityயும் Simputerஉம்”

07 ஜூலை 2005 – சில குறிப்புகள்

இந்த உலகிற்கு பயங்கரவாதம் ஒன்றும் புதிதல்ல. ஆனாலும் இன்றைய நிகழ்வுகள் இரு காரணங்களால் முக்கியத்துவம் பெருகிறது.

1. 2012 ஒலிம்பிக்ஸ் நடத்துவதற்கு இலண்டனை நேற்று தேர்ந்தெடுத்திருப்பது. இந்த வெற்றியிற்கான கொண்டாட்டங்கள் இன்னமும் முழுதாக துவங்கவில்லை. அடுத்த ஏழு வருடங்களில் இலண்டன் நகரம் காணவிருக்கும் மாற்றங்கள், அடையவிருக்கும் முன்னேற்றங்கள் என்று பிரித்தானியர்கள் கணவு கொண்டிருக்கும் போது வெடிகுண்டுகள் வெடித்திருக்கின்றன.

Continue reading “07 ஜூலை 2005 – சில குறிப்புகள்”

Explosions on London Underground

காலையில் அலுவலகத்திற்கு கிளம்பும் வரை எந்த செய்தியும் இல்லை. கொஞ்ச நேரத்திற்கு முன்பு தான் இது பற்றிய செய்தி கிடைத்தது. இது வரை நடந்திருப்பதா விபத்தா? இதற்கான காரணம் என்ன என்று ஸ்காட்லான்டு யார்டோ வேறு அலுவலகங்களோ அறிவிக்கவில்லை.

Several hurt in ‘Tube explosion’

At this moment no one knows what is really going on. It looks like London’s underground network is completely closed. There are news of multiple blast in London Underground, people injured in Liverpool Street station, and explosions in three buses.

Telegraph – Walking wounded after blast Underground

Financial Express – Explosions cause caos

Updates:

– British Transport Police said the incident, reported at at 8.49am on the Metropolitan Line between Liverpool Street and Aldgate, was thought to have been caused by a collision between two trains, a power cut or a power cable exploding.
– Union: ‘Explosive device’ on Tube

– 20 deaths have been confirmed – says LBC radio.

Update: 11:20

Listening to BBC radio… The Police has a very short but clear message for the people in London.

– Please stay whereever you are. The whole of London Transport is in stand still at the moment.
– Do not call emergency unless if it is an emergency situation.

Yahoo! 360° and some important Security Tips

இப்பொழுது தான் பார்த்தேன். யாஹூ 360 உபயோகிக்க விரும்புவோர் இனியும் பிறரின் அழைப்புக்காக காத்திருக்க தேவையில்லை. சோதிக்க/உபயோகிக்க விரும்புவோருக்கான சுட்டி இதோ: Yahoo! 360° – Home

—-o0o——–o0o——–o0o——–o0o—-

Stupidity

உங்கள் வலைப்பதிவுகளை நிறுத்தி வைப்போம் என்று சிலர் குறும்பாக சொல்லி வைக்க அதனை வாசித்த பலரும் ஆடிப்போயிருப்பதாக தெரிகிறது. தன் “Hard Disk Drive”ஐ அழிச்சுத் தொலைச்ச hackerஐ பற்றி இரு மாதங்களுக்கு முன்பு படித்தது இப்போது நினைவுக்கு வருகிறது.

அதற்காக இணைய தீவிரவாதிகளுக்கு பயப்படாமல் இருங்கள் என்று நான் சொன்னதை அனைவரும் தவறாக புரிந்து கொண்டு பயப்படாமல் இருந்து விட்டால் அதனால் விளையும் பின் வளைவுகளுக்கு நான் பொறுப்பாக முடியாதலாததால், உங்களுக்கு ஒரு பாதுகாப்பு வழிமுறையும் சொல்லி விடுகிறேன்.

இந்த வழிமுறையினை பின் பற்றுவதால் இணைய தீவிரவாதிகளிடம் இருந்து மட்டுமல்லாமல், Ad-ware, Spyware, Virus, Identity theft போன்ற பல ஆபத்துகளில் இருந்தும் உங்களை காப்பாற்றி கொள்ளலாம். இதற்காக உங்கள் மேலதிகாரி எனக்கு நன்றி செலுத்தவும் கூடும் – அலுவலகத்தில் உங்கள் பங்களிப்பு அதிகரிக்க போவதால்.

உங்கள் பாதுகாப்பை பலப்படுத்த தீயரண் (Firewall) எல்லாம் தேவைப்படாது. இணைய தீவிரவாதிகளிடம் இருந்து தப்பிக்க உங்களுக்கு ஒரு சுலபமான தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்துகிறேன். இந்த தொழில் நுட்பத்தை வாங்குவதற்கு உங்களுக்கு அதிகம் செலவாகாது. அதே நேரத்தில் அகலப்பாட்டை, ராஜாபாட்டை என்று நீங்கள் எந்த வகையான இணைப்பு வைத்திருந்தாலும் இது வேலை செய்யும்.

இது பற்றிய விரிவான தகவல்கள் மற்றும் செயல் விளக்கம் இங்கே.

பி.கு: இணையத்தில் உள்ள பிற தொழில் நுட்பங்களை போன்று இதுவும் சிலரால் தவறாக பயன்படுத்தக் கூடிய சாத்தியம் இருக்கிறது.

தொடர் ஓட்டம் :: Book Meme

வெளையாட்டை வேடிக்கை பார்க்கலாம்னு போன என்னையும் உள்ளே இழுத்து விட்டுட்டாரு அல்வாசிட்டி.விஜய். யோவ் விஜய்! இது உமக்கே நியாயமா படுதா…வே? என்னவோ நல்லாயிருவே… நல்லாயிரு.

எனக்கு எந்த வேலை செய்தாலும் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. எதை எடுத்தாலும் அகல உழுது தான் எனக்கு பழக்கம். என்னோட புத்தக வாசிப்பும் அதே மாதிரி தான். எல்லா தரப்பட்ட புத்தகங்களையும் படிச்சிருக்கேன். ஆனா யோசிச்சு பார்த்தா பிடிச்ச 5 புத்தகத்தை பட்டியல் போடனும்னா ரொம்ப கஷ்டமா போயிட்டுது.

Continue reading “தொடர் ஓட்டம் :: Book Meme”