பிறந்த நாளை நினைவில் வைத்துக்கொள்ள முடியாமல் குழம்பிய ஒரு ஜீவனை சந்தித்திருக்கிறீர்களா? இது என்ன சின்ன புள்ளைத்தனமா இருக்குங்குறீங்களா.
அந்த ஜீவன் வேற யாரும் இல்லை நான் தான். குழப்பம் ஆரம்பித்தது 6ஆம் வகுப்பிற்கான சேர்க்கையின் போது.
அது வரைக்கும் எங்கள் குடும்பம் நடத்தி வந்த பள்ளியில் (பாட்டி ஆரம்பித்த
மழலையர் பள்ளி) படித்து வந்த எனக்கு, 6ஆம் வகுப்பில் சேர்வதற்காக நெல்லை
சாஃப்டர் மேல்நிலை பள்ளிக்கு சென்ற போது அதிர்ச்சி காத்திருந்தது.