Thamiraparani Thendral

Improved Tamil language support in Mozilla

மொசில்லா குடும்ப உலாவிகள் தமிழ் யுனிகோடு எழுத்துக்களை பிய்த்து போடுவது பற்றி பலர் குறை பட்டாகிவிட்டது. தமிழ் தெரிந்த நிரலாளர்களுக்கு இதனை சரி செய்ய நேரமும் தேவையான விபரமும் இல்லாத நிலையில் இதற்கான முடிவு என்ன என்று அறியாமல் அனைவரும் முழித்துக் கொண்டிருக்க, இன்றைக்கு Mozilla Bugzilla பக்கமாக மேய்ந்து கொண்டிருந்த போது இந்த சுட்டி கண்ணில் பட்டது. http://blacksapphire.com/firefox-rtl/

இன்னும் சோதித்து பார்க்க வில்லை. எப்படி வேலை செய்கிறது என்று பார்க்க வேண்டும்.

This seems to work with a few minor glitches. Will write a final report after some intensive testing.


Posted by நவன் பகவதி on December 6th, 2005 :: Filed under கணினி,பொது,வலைப்பதிவர்

குடி பெயர்தல்

“ஐரோப்பாவிலிருந்து குடி பெயர்ந்து இங்கே வருபவர்கள் பரவாயில்லை. கலாசாரத்தில் பெரிதாக மாற்றம் இல்லாதிருப்பதால் அவர்கள் இங்குள்ள சமூகத்தில் கலந்து விடுகிறார்கள். ஆனால் மற்ற நாடுகளிலிருந்து வருபர்கள் தான் பெரிய பிரச்சனை.”

காலையில் அலுவலகத்துக்கு கிளம்புகையில் பிபிஸியில் அந்த பெண்மனி பேசிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது. ஏதோ பத்திரிக்கையின் உதவி ஆசிரியர் என்று அவர் பெயர் போட்டு கீழே எழுதியிருந்து. பெயரும் பத்திரிக்கையும் நினைவு இல்லை. கூட ஒரு கறுப்பர் இன நடுத்தர வயது ஆண். முதலில் இருந்து பார்க்காததால் அவரும் யார் என்று தெரியவில்லை.

அவர் ‘அப்படியெல்லாம் இல்லை. இங்கு புலம் பெயர்ந்து வரும் அனைவரும் இந்த சமூகத்தில் ஒரு பகுதி தான்’ என்று மறுக்க, ‘இல்லை எனக்கு தெரிந்து ஆப்பிர்க்காவில், ஆசியாவில் இருந்து வரும் பல குடும்பத்தில் இருந்து வரும் பலர் இன்னமும் தங்கள் பழக்க வழக்கத்தை விடாமல் தொடர்ந்து கடை பிடித்து வருவதால் அவர்களால இந்த சமூகத்துடன் ஒன்றிணைய முடியவில்லை’ என்று விடாது அடம் பிடித்தார் அந்த பெண்.

அவரது பார்வையில்

  • புலம் பெயர்ந்து வருபவர்களின் கலாசாரத்தில் பெரிய வேறுபாடு இருந்தால் அது ஏற்றுக் கொள்ள முடியாது.
  • பங்க்ளாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து வருபவர்களை விட இந்தியர்கள் விரைவாக மாறிக் கொள்கிறார்கள். அதனால் அவர்களாலும் அவர்கள் குழந்தைகளாலும் அதிகமாக சம்பாதிக்க முடிகிறது. அதன் மூலம் நாட்டின் முன்னேற்றத்துக்கும் உதவ முடிகிறது.

இன்னும் சில காரணங்களை அடுக்கிக் கொண்டு போனார். அவர் பேசியதில் சில விசயங்கள் இனவெறியாளரின் பேச்சு போன்று தோன்றவே நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் நெளிந்து கொண்டிருந்தனர்.

ஆனால் அந்த கறுப்பர் அழகா இரண்டு கேள்வி கேட்டார்.

  • இங்கு வருபவர்கள் தங்கள் அடையாளங்களை அழித்து விட்டு உங்களுக்கு தகுந்தார் போல் மாற வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். இரண்டு மூன்று தலைமுறைகளாய் இங்கு வாழ்ந்தும் சில இனத்தவர் தங்கள் பழக்கவழக்கங்களை விடாது பிடிவாதமாய் கடைபிடித்து இங்குள்ளவர்களிடம் இருந்து தள்ளியே இருக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இரண்டு மூன்று நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்தும் ஆங்கிலேயர்கள் ஏன் ஆப்பிரிக்க பழக்கவழக்கங்களுக்கு மாறாமல் தங்கள் பழக்க வழக்கங்களை இன்னமும் கடை பிடிக்கின்றார்கள்?
  • இந்தியர்கள் சமூகத்துக்கு அதிக பங்களிப்பதாக சொல்கிறீர்கள். இந்தியர்கள் என்றால் குஜராத்தியா? பஞ்சாபியா? மதராஸியா? எவரை சொல்கிறீர்கள்?

இதற்குள் செய்தியறிக்கைக்கு நேரமாகிவிட்டது என்று தொகுப்பாளர் இடை புகுந்து இவர்களின் பேச்சினை முடித்துக் கொண்டார்.

இந்த விவாதத்துக்கு காரணம் என்ன என்று பின்னர் தான் தெரிந்தது.

  • கடந்த பத்தாண்டுகளில் நாட்டின் மக்கட்தொகை அதிகரிப்பில் பாதிக்கு மேலானவர்கள் வெளிநாட்டில் இருந்து புலம் பெயர்ந்திருப்பவர்கள்.
  • இலண்டனில் இப்போது வசிப்பவர்களில் நான்கில் ஒருவர் வெளி நாட்டில் பிறந்தவர்.

சமன்பாட்டில் நிகழ்ந்து வரும் சில மாற்றங்கள் இங்குள்ளவர்களுக்கு கவலை அளிப்பது தெரிகிறது. அதிலும் சமீபத்திய தீவிரவாத தாக்குதலுக்கு பின்பு இந்த கவலை வலுப்பட்டிருக்கிறது.

கடந்த இரு மாதங்களாக ஊடகங்களில் வரும் பல செய்திகளும், அறிக்கைகளும், நிகழ்சிகளும் சில sensitiveஆன விசயங்களை நாசூக்காக தொட்டும் தொடாமலும் பேசி வருகிறது. இது வரைக்கும் தொலைக்காட்சிகளின் செயல்பாட்டினை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

இதுவரைக்கும் mainstream media பேசாமல் இருந்த பல விடயங்கள் இப்போது அலசத் தொடங்கியிருக்கிறது. இஸ்லாம் மதம் பற்றி கடந்த சில வாரங்களில் பார்த்த தொலக்காட்சி நிகழ்சிகளும் இதில் அடக்கம்.


Posted by நவன் பகவதி on September 8th, 2005 :: Filed under பொது

என்னன்னு சொல்றது?

தத்தெடுத்து இரண்டு வாரத்தில்..????


Posted by நவன் பகவதி on September 7th, 2005 :: Filed under பொது

Sim Cityயும் Simputerஉம்

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் வெளி வந்த சிம்ப்யூட்டர் (Simputer) கைக் கணினி அதன் மீதிருந்த எதிர்பார்ப்புகளை முழுவதுமாக பூர்த்தி செய்யவில்லை என்றே தோன்றியது.


Posted by நவன் பகவதி on September 7th, 2005 :: Filed under கணினி,பொது

07 ஜூலை 2005 – சில குறிப்புகள்

இந்த உலகிற்கு பயங்கரவாதம் ஒன்றும் புதிதல்ல. ஆனாலும் இன்றைய நிகழ்வுகள் இரு காரணங்களால் முக்கியத்துவம் பெருகிறது.

1. 2012 ஒலிம்பிக்ஸ் நடத்துவதற்கு இலண்டனை நேற்று தேர்ந்தெடுத்திருப்பது. இந்த வெற்றியிற்கான கொண்டாட்டங்கள் இன்னமும் முழுதாக துவங்கவில்லை. அடுத்த ஏழு வருடங்களில் இலண்டன் நகரம் காணவிருக்கும் மாற்றங்கள், அடையவிருக்கும் முன்னேற்றங்கள் என்று பிரித்தானியர்கள் கணவு கொண்டிருக்கும் போது வெடிகுண்டுகள் வெடித்திருக்கின்றன.


Posted by நவன் பகவதி on July 8th, 2005 :: Filed under பொது

Explosions on London Underground

காலையில் அலுவலகத்திற்கு கிளம்பும் வரை எந்த செய்தியும் இல்லை. கொஞ்ச நேரத்திற்கு முன்பு தான் இது பற்றிய செய்தி கிடைத்தது. இது வரை நடந்திருப்பதா விபத்தா? இதற்கான காரணம் என்ன என்று ஸ்காட்லான்டு யார்டோ வேறு அலுவலகங்களோ அறிவிக்கவில்லை.

Several hurt in ‘Tube explosion’

At this moment no one knows what is really going on. It looks like London’s underground network is completely closed. There are news of multiple blast in London Underground, people injured in Liverpool Street station, and explosions in three buses.

- Telegraph – Walking wounded after blast Underground

- Financial Express – Explosions cause caos

Updates:

- British Transport Police said the incident, reported at at 8.49am on the Metropolitan Line between Liverpool Street and Aldgate, was thought to have been caused by a collision between two trains, a power cut or a power cable exploding.
- Union: ‘Explosive device’ on Tube

- 20 deaths have been confirmed – says LBC radio.

Update: 11:20

Listening to BBC radio… The Police has a very short but clear message for the people in London.

- Please stay whereever you are. The whole of London Transport is in stand still at the moment.
- Do not call emergency unless if it is an emergency situation.


Posted by நவன் பகவதி on July 7th, 2005 :: Filed under பொது

தொடர் ஓட்டம் :: Book Meme

வெளையாட்டை வேடிக்கை பார்க்கலாம்னு போன என்னையும் உள்ளே இழுத்து விட்டுட்டாரு அல்வாசிட்டி.விஜய். யோவ் விஜய்! இது உமக்கே நியாயமா படுதா…வே? என்னவோ நல்லாயிருவே… நல்லாயிரு.

எனக்கு எந்த வேலை செய்தாலும் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. எதை எடுத்தாலும் அகல உழுது தான் எனக்கு பழக்கம். என்னோட புத்தக வாசிப்பும் அதே மாதிரி தான். எல்லா தரப்பட்ட புத்தகங்களையும் படிச்சிருக்கேன். ஆனா யோசிச்சு பார்த்தா பிடிச்ச 5 புத்தகத்தை பட்டியல் போடனும்னா ரொம்ப கஷ்டமா போயிட்டுது.


Posted by நவன் பகவதி on June 10th, 2005 :: Filed under பொது,வலைப்பதிவர்,வாழ்க்கை

Can you change my Yahoo username?

புது (சக) ஊழியர்: வணக்கம் நவன். நல்லா இருக்கீங்களா?

நான்: பரவாயில்லை. நீங்க?

புசஊ: நல்லாயிருக்கேன். என் பெயரில் மின்னஞ்சல் கணக்கு திறந்து கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி. (இது அலுவலகத்தின் டொமைனில் அவருக்கு உருவாக்கிக் கொடுத்த மின்னஞ்சல் முகவரி). ஆனா அதுக்குள்ளே எப்படி போறதுன்னு தெரியலை.


Posted by நவன் பகவதி on June 8th, 2005 :: Filed under கணினி,பொது

வலைப்பதிவராய் ஒரு வருடம்

இந்த வலைப்பதிவு ஆரம்பித்து ஒரு வருடம் முடிந்து இரண்டு நாட்களாகி விட்டது.

இந்த ஒரு வருடத்தில் 117 பதிவுகளும் அதற்கு 263 மறுமொழிகளும் இந்த வலைப்பதிவில் சேகரிக்கப்பட்டிருக்கிறது. அதே போல் 8 templates, 2 weblogging software என்று சில உபரி statisticsஉம் நினைவிற்கு வருகிறது.

இன்னொரு புறம் பார்த்தால் உருப்படியாக ஏதாவது செய்திருக்கிறேனா என்றால் ஓரிரு பதிவுகளை தவிர உருப்படியாக ஏதும் எழுதியதாக நினைவுக்கு வரவில்லை. இந்த ஒரு வருடத்தில் பள்ளி/கல்லூரி நாட்களில் படிக்காத தமிழினை கொஞ்சம் எழுதிப் பழகியிருக்கிறேன் என்பது மட்டும் கொஞ்சம் மகிழ்வாக இருக்கிறது.


Posted by நவன் பகவதி on May 15th, 2005 :: Filed under பொது

வெண்ணையை விடமாட்டேன்

டில்பர்ட், Calvin and Hobbes எல்லாவற்றிற்கும் முன்பாக நான் இரசித்த முதல் கேலிச்சித்திரம்/கார்ட்டூன் அமுலின் வெண்ணெய் விளம்பரங்கள் தான்.

அடுத்ததாக அமுல் வாயில் அகப்படவிருக்கும் அவல் யார் என்பதை ஆவலுடன் எதிர்பார்த்த நாட்கள் உண்டு. நீண்ட நாட்களுக்கு பின்பு இன்று அமுல் இணையதளத்தில் அமுலின் பிரபல விளம்பரங்களை பார்க்க நேர்த்தது.


Posted by நவன் பகவதி on May 7th, 2005 :: Filed under பொது