கோடையின் கடைசி குதூகலம்

இந்த வாரம் இலண்டனின் மிகப்பெரிய வருடாந்திர திருவிழாவான ‘நாட்டிங் ஹில் கார்னிவல்’ நடைபெறுகிறுது. ரியோடி ஜெனரோவின் கார்னிவலுக்கு அடுத்த படியாக உலகின் இரண்டாவது பெரிய கார்ணிவல் இந்த நாட்டிங் ஹில் கார்னிவல் (Notting Hill Carnival) தான்.

நமது தேர் திருவிழா போல கார்னிவல் நாட்களில் நகரமே களை கட்டிவிடும். மக்கள் விதவிதமான ஆடை அலங்காரங்களில் தெருக்களுக்கு வந்து ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடுவார்கள். ஒவ்வொரு வருடமும் அகஸ்து மாதத்தின் கடைசி வாரயிறுதியில் நடைபெறும் இந்த திருவிழா கடந்த 40 வருடங்களாக வெற்றிகரமாக தொடர்ந்து வருவதற்கு முக்கிய காரணம், கோடையின் இறுதி திருவிழா இது.
Continue reading “கோடையின் கடைசி குதூகலம்”

முற்றுப்புள்ளி

‘சைவ நெறி’ தொடர்பாய் இனையத்தில் தேடிக்கொண்டிருந்த போது அந்த இனைய தளத்தில் இடறி விழுந்தேன். நான் தேடிய விடயங்கள் அந்த தளத்தில் கிடைக்கவில்லை என்பது ஒரு புறமிருக்க என்னை கொஞ்சம் கவலைப்பட வைத்தது அதிலிருந்த சில பகுதிகள்.

Continue reading “முற்றுப்புள்ளி”

கூகிளில் யுனிகோடுடன் தேடல்

மகிழ்வாக இருக்கிறது. இந்த யுனிகோடினால் என்னென்ன சௌகரியங்கள் எல்லாம் கிடைக்கிறது. எனது கோப்புக்களை தமிழில் சேமித்து வைத்துக்கொள்ள முடிகிறது. இந்த மாதிரி ப்ளாக் ஒன்று திறந்து வைத்து கண்டபடி கிறுக்க முடிகிறது.

இவையொல்லாவற்றையும் விட கூகிள் மூலம் தேட முடிகிறது. நான் மிகவும் இரசித்து படிக்கும் சில வலைப்பதிவுகளுக்கான தள முகவரிகளை என் ப்ரௌசரில் எழுத்துப்பிழை இல்லாமல் அடிப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டு வந்தேன். உதாரணமா நம்ம வலைப்பூக்கு போகும்போதெல்லாம் இந்த பிரச்சனை தான் தினமும். வலைப்பூ.யாழ்.நெட் என்று தான் நினைவில் இருக்குமே தவிர ஆங்கிலத்தில் அதை டைப் செய்யும் போது http://valaippoo.yarl.net என்று ஒரு நாள் கூட சரியாக அடித்ததில்லை. ஒரு ‘p’ அல்லது ‘o’ அடிக்க மறந்திவிடுவேன்.

ஆனால் இப்போது நேராக எனது மொசில்லா ஃபயர்ஃபாக்ஸ் உலாவியில் "வலைப்பூ" என்று அடித்தால் அது உடனயாக கூகிளில் தேடி வலைப்பூ தளத்திற்கு என்னை கொண்டு சேர்த்துவிடுகிறது. "காசி தமிழ்" என்று அடித்தால் இதோ காசி ஆறுமுகத்தின் http://kasi.thamizmanam.com செல்ல முடிகிறது.

வாழ்க கூகிள். வளர்க யுனிகோடின் பயன்பாடு.

முரசு அஞ்சலும் ஈ-கலப்பையும்

இத்தனை நாட்களாக முரசு அஞ்சல் தான் உபயோகித்து வந்தேன். உபயோகித்துவந்தேன் என்று சொல்வதை விட உபயோகிக்க கற்று வந்தேன் என்று தான் சொல்லவேண்டும். இன்றைக்கு ஈ-கலப்பை உபயோகிக்கலாமே என்று நினைத்தேன்.

முரசை விட இது மிகவும் வசதியாகயிருக்கிறது. இன்னும் சில நாள் பரிசோதனைக்குப் பிறகு முரசு அஞ்சலை முழுவதுமாக கணினியிலிருந்து நீக்கிவிடலாம் என்று நினைக்கிறேன்.

சகிப்பு vs கோபம்

நம் கூடவே இருப்பவர்கள் சில சமயங்களில் "இவனக்கு எங்கே தெரிய போகிறது" என்று நினைத்தோ அல்லது "இதை கண்டுபிடிக்கும் அளவிற்கு இவனுக்கு எங்கே திறமை இருக்கிறது" என்று நினைத்தோ சில காரியங்களை செய்யும் போது முன்பெல்லாம் கெட்ட கோபம் வரும் எனக்கு. அது சரி கோபத்தில் நல்ல கோபம் என்று இருக்கிறதா என்ன?

எந்த வகையிலாவது அவர்கள் செய்த துரோகத்திற்கு பாடம் புகட்டவேண்டும் அல்லது குறைந்த பட்சம் அவர்கள் செயவது எனக்கு தெரியாமல் இல்லை என்று அவர்களுக்கு தெரியவைப்பதற்காகவாவது முயல்வேன்.

ஆனால் இப்போதெல்லாம் கோபம் வருவதில்லை. காலம் கற்றுக்கொடுத்த பாடங்கள், மனதிற்கு அமைதியை ஓரளவு வழங்கியிருக்கிறது. யார் என்ன செய்தாலும் மனசுக்குள் ஒரு சிரிப்புடன் அதை ஏற்றுக்கொள்கின்ற பக்கும் வந்துவிட்டதாய் தான் தோன்றுகிறது. அவர்கள் அவ்வாறு செய்ய காரணமான சூழ்நிலையை சிந்திக்க முடிகிறது. ஆனாலும் ஏன் என்னிடம் இந்த மாதிரி நடந்து கொள்ள வேண்டும்.

விஷயம் என்னான்னு சொன்னா புரிஞ்சுக்க போறேன். அதுக்கு எதுக்கு ஆயிரம் பொய் சொல்லனும்.

பின் குறிப்பு-1: ஆனாலும் இந்த கூடவே பிறந்த கோபம் அப்பப்பம் வந்து இந்த மாதிரி கிறுக்க வைத்து விடுகிறது.

பின் குறிப்பு-2: Sorry. நல்ல கோபம்-கெட்ட கோபம் என்று புளிச்சு போன ஜோக் சொன்னதற்கு .

நியூக்கிளியஸ்

நியூக்கிளியஸ் உபயோகித்து ஒரு வலைப்பதிவு ஆரம்பித்து விட்டேனே தவிர தமிழ் எழுத்துருவங்களை சரியாக தெரிய வைப்பதற்கு stylesheets மற்றும் டெம்ப்ளேட் எல்லாம் இன்னமும் சரி செய்யவில்லை. இன்று கொஞ்சம் நேரம் கிடைத்ததில் stylesheets எல்லாம் சரி செய்ய முடிந்தது.

கோவிந்தா கோவிந்தா

ஏரத்தாள 3000 வலைப்பதிவுகளுக்கு இது வரை அளித்து வந்த சேவையை ஒரே நாளில் நிறுத்தியுள்ளது weblogs.com. இது சரியா தவறா என்று இனையத்தில் பல்வேறான வாக்குவாதங்கள் நடந்து வருகிறது.

எனக்கு தெரிந்தவரை இது போன்று இலவச சேவை அளித்து வரும் நிறுவனங்கள்
எதுவும் தொடர்ந்த இடர்பாடில்லாத சேவைக்கு எந்த ஒரு உத்திரவாதமும்
அளிப்பதில்லை. எந்த நேரத்திலும் தங்கள் பதிவுகளை இழக்க நேரிடும் அபாயம்
உள்ளது என்பதை இது போன்ற இலவச சேவைகளை உபயோகிக்கும் வாடிக்கையாளர்கள் மனதில் வைத்திருக்க வேண்டியதை இந்த செய்தி மீண்டும் ஒரு முறை உறுதிபடுத்திகிறது.

அதற்காக இலவச சேவைகள் எதையுமே உபயோகிக்க
கூடாது என்று அர்த்தமில்லை. இலவச சேவையோ இல்லையோ உங்கள் வளை பதிவுகள் மற்றும் மின்னஞ்சல் போன்றவைகளை அவ்வப்போது பாதுகாப்பான இடத்தில் பின்சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.

அப்புறம் பாதிக்கபட்ட 3000 weblogs.com வாடிக்கையாளர்களில் இது வரை 158 பேர் மற்றுமே தங்கள் பதிவுகளை திருப்பி தருமாறு வேண்டியிருக்கிறார்கள். 3000 வளைப்பதிவுகளில் ஆர்வத்தோடு வளை பதித்து வந்தவர்கள் வெறும் 158 நபர்கள் மட்டும் தானா? அல்லது பெறும்பாலானோர் ஏற்கெனவே backup எடுத்திருந்தார்களா? தெரியவில்லை.

யாஹூ

யாஹூ தனது வாடிக்கையாளர்களுக்கு அளித்து வந்த 4MB இட ஒதுக்கீடை 100MBயாக உயர்த்தியுள்ளது. "அது தான் அனைவருக்கும் தெரிந்த செய்தியாயிற்றே!" என்கிறீர்களா. பலருக்கு தெரிந்திருக்க வாய்பில்லாத இன்னொரு செய்தி உண்டு.

Continue reading “யாஹூ”

இங்கேயும் ஒரு தேர்தல்

இங்கே இங்கிலாந்தில் ஒரு தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. நம்ம ஊர் பஞ்சாயத்து தேர்தல் மாதிரியான local bodies election இது.

இலண்டனில் கென் லிவிங்ஸ்டன் மறுபடியும் மேயராக வந்திருகிறார். அதை தவிர்த்து விட்டு பார்த்தால் பிரதமர் டோனி ப்ளேரின் தெழிலாளர் கட்சிக்கு (Labour Party) இந்த தேர்தல் தேர்தல் முடிவுகள் மரண அடியாக அமைந்திருக்கிறது. கென் லிவிங்ஸ்டனின் இந்த வெற்றி கூட மிக குறைவான் வாக்குகள் வித்தியாசத்திலேயே அமைந்திருக்கிறது.

முக்கியமாக நியூ காஸில் (New Castle), லீட்ஸ் (Leeds) போன்ற நகரங்கள் இக்கட்சிக்கு எப்பொழுதுமே ஒரு கோட்டையை போன்று பலமான இடங்கள். இந்த முறை இந்த இடங்களை கூட லேபர் பார்ட்டியினால் தக்க வைத்து கொள்ள முடியவில்லை.

அரசியல் வல்லுனர்களும், பத்திரிக்கைகளும்,ஈராக் தேர்தலில் இங்கிலாந்தின் பங்களிப்பே இந்த தோல்விக்கு பிரதான காரணமாக கூறுகின்றனர்.

அப்புறம் முடிக்கிறதுக்கு முன்னாடி ஒரு சின்ன புள்ளி விபரம். இலண்டனில் இந்த முறை 37% ஓட்டு பதிவாகியுள்ளது . சென்ற மேயர் தேர்தலின் போது இது வெறும் 33.5% தானாம். அனைத்து நாட்டு மக்களுமே இப்படி தானோ. எந்த நாட்டிலாவது 80%-90% polling நடந்திருக்கிறாதா தெரியவில்லை.