கோவிந்தா கோவிந்தா

ஏரத்தாள 3000 வலைப்பதிவுகளுக்கு இது வரை அளித்து வந்த சேவையை ஒரே நாளில் நிறுத்தியுள்ளது weblogs.com. இது சரியா தவறா என்று இனையத்தில் பல்வேறான வாக்குவாதங்கள் நடந்து வருகிறது.

எனக்கு தெரிந்தவரை இது போன்று இலவச சேவை அளித்து வரும் நிறுவனங்கள்
எதுவும் தொடர்ந்த இடர்பாடில்லாத சேவைக்கு எந்த ஒரு உத்திரவாதமும்
அளிப்பதில்லை. எந்த நேரத்திலும் தங்கள் பதிவுகளை இழக்க நேரிடும் அபாயம்
உள்ளது என்பதை இது போன்ற இலவச சேவைகளை உபயோகிக்கும் வாடிக்கையாளர்கள் மனதில் வைத்திருக்க வேண்டியதை இந்த செய்தி மீண்டும் ஒரு முறை உறுதிபடுத்திகிறது.

அதற்காக இலவச சேவைகள் எதையுமே உபயோகிக்க
கூடாது என்று அர்த்தமில்லை. இலவச சேவையோ இல்லையோ உங்கள் வளை பதிவுகள் மற்றும் மின்னஞ்சல் போன்றவைகளை அவ்வப்போது பாதுகாப்பான இடத்தில் பின்சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.

அப்புறம் பாதிக்கபட்ட 3000 weblogs.com வாடிக்கையாளர்களில் இது வரை 158 பேர் மற்றுமே தங்கள் பதிவுகளை திருப்பி தருமாறு வேண்டியிருக்கிறார்கள். 3000 வளைப்பதிவுகளில் ஆர்வத்தோடு வளை பதித்து வந்தவர்கள் வெறும் 158 நபர்கள் மட்டும் தானா? அல்லது பெறும்பாலானோர் ஏற்கெனவே backup எடுத்திருந்தார்களா? தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *