இத்தனை நாட்களாக முரசு அஞ்சல் தான் உபயோகித்து வந்தேன். உபயோகித்துவந்தேன் என்று சொல்வதை விட உபயோகிக்க கற்று வந்தேன் என்று தான் சொல்லவேண்டும். இன்றைக்கு ஈ-கலப்பை உபயோகிக்கலாமே என்று நினைத்தேன்.
முரசை விட இது மிகவும் வசதியாகயிருக்கிறது. இன்னும் சில நாள் பரிசோதனைக்குப் பிறகு முரசு அஞ்சலை முழுவதுமாக கணினியிலிருந்து நீக்கிவிடலாம் என்று நினைக்கிறேன்.
முரசு அஞ்சலை தூக்கத் தேவையில்லை. அதன் கூட வரும் எழுத்துருக்கள்(fonts) அழகானவை. அந்த ஒரு காரணத்திற்காக மட்டுமே அஞ்சலை வைத்திருக்கிறேன் 🙂
நான் நினைத்தேன் முரசு அஞ்சல் fonts மட்டும் தனியாக வேண்டுமானால் உபயோகப்படுத்தலாம் என்று. அவை அஞ்சல் software இல்லாமல் உபயோகப்படாதா?