சகிப்பு vs கோபம்

நம் கூடவே இருப்பவர்கள் சில சமயங்களில் "இவனக்கு எங்கே தெரிய போகிறது" என்று நினைத்தோ அல்லது "இதை கண்டுபிடிக்கும் அளவிற்கு இவனுக்கு எங்கே திறமை இருக்கிறது" என்று நினைத்தோ சில காரியங்களை செய்யும் போது முன்பெல்லாம் கெட்ட கோபம் வரும் எனக்கு. அது சரி கோபத்தில் நல்ல கோபம் என்று இருக்கிறதா என்ன?

எந்த வகையிலாவது அவர்கள் செய்த துரோகத்திற்கு பாடம் புகட்டவேண்டும் அல்லது குறைந்த பட்சம் அவர்கள் செயவது எனக்கு தெரியாமல் இல்லை என்று அவர்களுக்கு தெரியவைப்பதற்காகவாவது முயல்வேன்.

ஆனால் இப்போதெல்லாம் கோபம் வருவதில்லை. காலம் கற்றுக்கொடுத்த பாடங்கள், மனதிற்கு அமைதியை ஓரளவு வழங்கியிருக்கிறது. யார் என்ன செய்தாலும் மனசுக்குள் ஒரு சிரிப்புடன் அதை ஏற்றுக்கொள்கின்ற பக்கும் வந்துவிட்டதாய் தான் தோன்றுகிறது. அவர்கள் அவ்வாறு செய்ய காரணமான சூழ்நிலையை சிந்திக்க முடிகிறது. ஆனாலும் ஏன் என்னிடம் இந்த மாதிரி நடந்து கொள்ள வேண்டும்.

விஷயம் என்னான்னு சொன்னா புரிஞ்சுக்க போறேன். அதுக்கு எதுக்கு ஆயிரம் பொய் சொல்லனும்.

பின் குறிப்பு-1: ஆனாலும் இந்த கூடவே பிறந்த கோபம் அப்பப்பம் வந்து இந்த மாதிரி கிறுக்க வைத்து விடுகிறது.

பின் குறிப்பு-2: Sorry. நல்ல கோபம்-கெட்ட கோபம் என்று புளிச்சு போன ஜோக் சொன்னதற்கு .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *